Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டு

ஆகஸ்டு 13, 2019 08:56

காஷ்மீர் : காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் முக்கிய பங்காற்றிய 2 பெண் அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தகவல் தொடர்பு இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரியான சையத் அஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். 

மருத்துவராக இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ஸ்ரீநகரில் சேர்ந்தவர்கள் தொலை தூரத்தில் உள்ள தங்களது உறவினர்களிடம் பொது தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி செய்துள்ளார். தொலைபேசி, இணையதளம் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் அஸ்கர் செய்த உதவி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. 

இதே போல் சண்டிகரை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நித்யா என்பவர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். ஆளுநர் மாளிகை போன்ற முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களின் பாதுகாப்பை இவர் கையாண்டார். சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் அஸ்கர், நித்யா ஆகியோர்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தலைப்புச்செய்திகள்