Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

ஆகஸ்டு 13, 2019 09:49

சென்னை: பள்ளிகளில் சாதிப்பிரிவினைகள் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தலைமை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். இதில் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக்கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதால் பள்ளிகளிலே பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமை கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்