Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: கார் திருடிய இருவர் கைது- 3 கார் பறிமுதல்

ஆகஸ்டு 15, 2019 07:21

சென்னை: திருவான்மியூரில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை திருடி சென்ற 2 மெக்கானிக்குகளை போலீசார் கைது செய்தனர்.

திருவான்மியூர் திருவள்ளூர்  பகுதியில் வசித்து வருபவர் சுதர்சனன். இவர் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட கார் காணமல் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த சுதர்சன் போலீசாரிடம் புகார் அளித்தார். 

அடையாரில் உள்ள ஒரு கார் மெக்கானிக் கடையில், நின்றுகொண்டிருந்த கார் மீது சந்தேகமடைந்த போலீசார் கடையின் உரிமையாளர் பாலமுருகனிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அவர் முன்னுக்கு பின் பதிலளித்ததால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நண்பருடன் சேர்ந்து சுதர்சனன் வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த காரை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். 

மேலும், இதே போன்று கார்களை திருடி பதிவு எண்களை மாற்றி அவர்கள் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது இதைத்தொடர்ந்து பலமுருகனையும், அவர்து நண்பர் சிராஜுதீனையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 3 கார்களை பறிமுதல் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்