Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயிலில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி: மக்கள் அதிர்ச்சி

ஆகஸ்டு 15, 2019 07:41

திருநெல்வேலி: சங்கரன்கோயில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் 125 அடி உயர  ராஜகோபுரத்தில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசுவாமி கோயில் உள்ளது. 

125 அடி உயரம் கொண்ட  இந்தக் கோயிலின் ராஜகோபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போதும் கோயில் நிர்வாகத்தால் தேசியக் கொடி ஏற்றப்படும். சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்கள் வரை தெரியும் அளவிற்கு இந்த தேசியக் கொடியானது பட்டொளி வீசிப் பறக்கும். 

ஆனால் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கரநாராயணசாமி கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசியக் கொடி தலைகீழாகப் பறப்பதைப் பார்த்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்