![](admin/uploads/.6298f06b65f9c2.82560131.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் இசக்கிமுத்து பாதுகாப்பு பணியில் இருந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்