Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு

பிப்ரவரி 22, 2019 09:33

ஆலந்தூர்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் கடந்த 17-ந்தேதி காலை 8.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவருடைய செல்போன் திடீரென மாயமாகி இருந்தது. 

வீட்டிற்கு சென்ற பின்பே செல்போன் திருடு போய் இருப்பது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அமைச்சரின் உதவியாளர் ஏர் இந்தியா அலுவலகம் மற்றும் விமானநிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். 

மேலும் சென்னை விமானநிலைய போலீஸ் மற்றும் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. 

சென்னை விமான நிலையத்தில் அன்றைய தேதியில் பதிவாகியுள்ள கேமரா காட்சிகள் மற்றும் அந்த விமானத்திற்குள் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலைய தொழிலாளர்களிடமும் விசாரணை நடந்தது.

தலைப்புச்செய்திகள்