![](admin/uploads/.638ee3779d8cb7.45105260.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: சினிமாவில் தான் கமல்ஹாசனால் முதல்வராக முடியும் , மக்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மாவின் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டதாக கூறினார். எம்.ஜி.ஆரின் தொப்பியும் கண்ணாடியும் ஊர்வலமாகச் சென்றாலே ஓட்டு விழும் எனவும், தெய்வம் தேரில் வந்தாலே மக்கள் கூடுவார்கள், ஆனால் அம்மா காரில் வந்த போது மக்கள் வெள்ளம் சூழ்ந்தது என கூறினார்.
மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் கமல்ஹாசன் இல்லை என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் சொல்லுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.