Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலி துப்பாக்கியை வைத்து மிரட்டிய நபர் கைது

ஆகஸ்டு 18, 2019 03:24

விருதுநகர்: விருதுநகர் அருகே தனது காரை முந்தி சென்ற மற்றொரு வாகன ஓட்டுநரை அமேசானில் வாங்கிய போலி துப்பாக்கியால் மிரட்டிய நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் செவல்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் தனக்கு சொந்தமான சொகுசு காரில் மதுரை சென்று விட்டு இராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். டி. கல்லுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது அவரது காரை பின்னால் வந்த டாட்டா ஏசி வாகனம் ஒன்று முந்திச் செல்ல முயன்றுள்ளது. இதனால் முத்துகிருஷ்ண்னுக்கும் டாட்டா ஏசி வாகன ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

ஒருகட்டத்தில் ஆத்திரம்டைந்த முத்துகிருஷ்ணன் கையில் வைத்திருந்த போலி துப்பாக்கியைக் காட்டி டாட்டா ஏசி வாகன ஓட்டுநரை மிரட்டியுள்ளார். இதையடுத்து டாட்டா ஏசி வாகன ஓட்டுநர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி ராஜபாளையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் முத்துகிருஷ்ணனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த போலி துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். 

அந்தத் போலி துப்பாக்கியை அமேசான் மூலம் ஒன்பது ஆயிரம் ரூபாய்க்கு முத்துகிருஷ்ணன் வாங்கியது தெரிய வந்தது. அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்