![](admin/uploads/.5c835de1213c47.04691346.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர், சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், பிரதமர், அமித் ஷா உட்பட அனைத்து பா.ஜ., தலைவர்களும் பங்கேற்றனர். சுஷ்மாவின் மகள், பன்சுரி, இந்நிகழ்ச்சியில் பேசினார்.
தன் குடும்பத்திற்கு, மோடி எவ்வளவு ஆதரவாக இருந்தார் என்றும், பா.ஜ., தலைவர்கள், தன் அம்மாவிற்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்றும், ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல பேசினார்.
சுஷ்மா உயிரோடு இருந்த வரை, பன்சுரி எந்தவோர் அரசியல் நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை; அரசியல்வாதிகளிடம் பேசியதும் இல்லை. அப்படிப்பட்டவர், தன் அம்மாவின் அஞ்சலி நிகழ்ச்சியில், சரளமாக பேசியது, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
சுஷ்மா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய, 25வது வயதில், ஹரியானாவின், அம்பாலா தொகுதியிலிருந்து, எம்.எல்.ஏ.,வாகி, தன் அரசியல் வாழ்க்கையை துவக்கியவர்.இந்த வருட இறுதியில், ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ., சார்பில், பன்சுரி, இம்மாநிலத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்கின்றனர், அதன் தலைவர்கள். பன்சுரியின் பேச்சு பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் கவர்ந்துவிட்டதாம்.