Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் நாளை முதல் தண்ணீர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

ஆகஸ்டு 20, 2019 01:18

சென்னை: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

இதனடிப்படையில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், வழக்குகளுக்கு பயந்து தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் பணிக்கு வருவதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே, தண்ணீர் எடுப்பதற்கு முறையாக அனுமதியளிக்க வலியுறுத்தி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

தண்ணீர் லாரிகளில் பணிபுரிபவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய தனி வாரியம் அமைக்கவும், லாரி உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தியும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் பங்கேற்க உள்ளன.

இதனால், சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்