Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கஞ்சா போதையில் பள்ளி குழந்தைகள் கடத்தல்

ஆகஸ்டு 23, 2019 10:18

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு அடுத்த ஏரிமேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வீரன் என்பவரின் மகள் தனுஸ்ரீ, மகன் அருண் ஆகிய இருவரும் அனுப்பம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை குழந்தைகள் இருவரும் வழக்கம் போல பள்ளிக்கு செல்லும் போது அவ்வழியே வந்த இளைஞன் ஒருவன் பள்ளியில் இறக்கி விடுவதாக கூறி அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளான்.

இதனை அடுத்து அவர்களை ஏற்றி கொண்ட வாகனம் பள்ளியை தாண்டி செல்வதை கண்ட பிற மாணவர்கள் ஆசிரியரிடம் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் குழந்தைகள் கடத்தப்பட்டது குறித்து பெற்றோருக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசாரும், கிராம இளைஞர்களும் நாலாபுறமும் தங்களின் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அந்த இரு குழந்தைகளையும்  இருசக்கர வாகனத்தில் வைத்து சுற்றித் திரிந்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அந்த இரு குழந்தைகளும் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். 

போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞன் கேசவபுரம் கிராமத்தை சேர்ந்த சுகுமார் என்பது தெரிய வந்தது.  மேலும் கஞ்சா போதையில் இருப்பதால்  குழந்தைகள் இருவரையும் கடத்தும் நோக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வைத்து சுற்றித் திரிந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்