Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை: திருவாரூரில் 10 பேர் கைது

ஆகஸ்டு 23, 2019 12:35

திருவாரூர்: இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையை போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு, மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. 

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நாகூரில் மாமனார் வீட்டில் தங்கியிருந்த போது சையது அபுதாகீர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்,  ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் மணல்வாடி பகுதியை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்,  திருவாரூர் அருகே முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேரை திருவாரூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்