Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: நிலத்தடி நீருடன் சமையல் எண்ணெய் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

ஆகஸ்டு 24, 2019 03:21


சென்னை:  திருவொற்றியூர் மீனவர் குடியிருப்பு பகுதியில், நிலத்தடி நீருடன் சமையல் எண்ணெய் கலந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மீனவர்களுக்கு குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு அருகே உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு, ராட்சத டேங்கர் மூலம் சமையல் எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் ராட்சத டேங்கரில் இருந்து கசியும் எண்ணெயானது, பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீரில் கலந்துவிடுகிறது. 

இந்நிலையில் மீனவர்கள் தங்களது வீடுகளில் இருந்து மின்மோட்டார் மூலம், நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தியபோது, அதில் சமையல் எண்ணெய் கலந்து வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சரும நோய்களுக்கு ஆளாவதாகக் கூறும் பொதுமக்கள், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்