![](admin/uploads/.5f82a73006abb5.41815705.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பதி : வேலை வாங்கி தருவதாக கூறி, 600 பெண்களை ஏமாற்றி, ஆபாச புகைப்படங்கள் மற்றும், 'வீடியோ'க்கள் எடுத்து, பின்னர் மிரட்டி பணம் பறித்தவரை, ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில், பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜ் செழியன் என்ற, பிரதீப். இவர் நட்சத்திர ஓட்டலில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆபாச புகைப்படங்களை எடுத்துள்ளார். பின் அதன்மூலம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். பணம் தராவிட்டால் புகைப்படங்களை இணையத்தில் விட்டுவிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
6 மாநிலங்களை சேர்ந்த், 600 பெண்கள் இவரிடம் சிக்கி ஏமாந்துள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை வந்த ஐதராபாத் போலீசார், ராஜ் செழியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து, இரண்டு செல்போன்கள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய கணினியை போலீசார் கைப்பற்றினர்.