Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை: உயிரோடு இருப்பவருக்கு டெத் ரிப்போர்ட்

ஆகஸ்டு 25, 2019 05:46

கோவை : உயிரோடு இருப்பவரை, இறந்து விட்டதாக, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், போலீசாருக்கு, 'ரிப்போர்ட்' அளித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் சாலையைச் சேர்ந்த யூசுப் குடிப்பழக்கம் கொண்டவர். மதுபோதையில் மனைவிக்கு பதில் மாமியாரை கத்தியால் குத்திவிட்டார். சிகிச்சை பெற்ற ஆதிரா பேகம் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்கள் ஆதிரா பேகம், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார் என்பதற்கு பதிலாக, 'டெத்' என எழுதி, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

இது குறித்து, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன், அசோகன் கூறியதாவது:ஆதிரா பேகம், யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டார். அதே நேரத்தில், மற்றொரு பெண் ஒருவர், இறந்து விட்டார். இறந்த பெண் பெயருக்கு பதிலாக, ஆதிரா பேகம் இறந்து விட்டதாக, தவறாக எழுதி விட்டனர். ஆனால், தவறை உணர்ந்து, சிறிது நேரத்தில் திருத்தம் செய்து கொடுத்தனர். போலீசார், அதை கவனிக்காமல் விட்டதால், தவறு நடந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்