Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: சென்னையில் விசிகவினர் போராட்டம்

ஆகஸ்டு 26, 2019 08:06

சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தியதை கண்டித்து சென்னையில் அண்ணாசாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நேற்றைய தினம் அங்கிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு பெரிய கலவரமும் வெடித்தது. 

சாலை விபத்தால் ஏற்பட்ட சண்டை ஜாதி கலவரமாக மாறியது. அந்த பகுதியை சேர்ந்த இரண்டு தரப்பினரும் சண்டை போட்டனர். மேலும் பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்தி சண்டையிட்டு கொண்டனர். இதில் ஒரு பிரிவினர் அங்கிருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தனர்.  இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்த சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்பட்டது. 

இந்த சிலை உடைப்பிற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவையில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அண்ணா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அங்கு போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

தலைப்புச்செய்திகள்