Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐநா மனித உரிமைகள் ஆணையம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேச அனுமதி

ஆகஸ்டு 27, 2019 04:56

சென்னை: பன்னாட்டு சட்டங்கள் அமைய கடந்த 1948-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் உள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக  உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஐநா மனித உரிமைகள்  ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. 

இந்த ஆணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை என்பவர் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு தமிழர்  ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கும் நிலையில் இன்னொரு தமிழர் இந்த கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தலைப்புச்செய்திகள்