![](admin/uploads/.60548a130de9d8.52757127.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவிலுள்ள காயம்பட்டு ஏரிகளில் தற்பொழுது தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏரியில் இருந்து அள்ளப்படும் மொரம்பு மண்ணை விவசாய நிலத்திற்கு கொட்டுவதற்கு அனுமதி பெற்று, லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் அதிக விலைக்கு தனியார் வீட்டு மனைகளுக்கு விற்பனை படுஜோராக நடக்கிறது.
செங்கம் நகரப்பகுதிகளில் தெருக்களிலும், நகர சாலைகளிலும் தனியார் வணிக நிறுவனங்களுக்கும் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் மற்றும் காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் புகையால் கடும் அவதிக்கு ஆகிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள்.