![](admin/uploads/.5c8cb8263a2064.54398060.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா அடுத்த மாதம் 30ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு முன் ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும் போதும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
கடந்த முறை நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது காற்றடைத்த கருப்பு பலூன்களை வானத்தில் பறக்கவிட்டு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றிற்கு எதிர்ப்பை தெரிவித்தது திமுக.
தற்போது முத்தலாக் தடை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என மத்திய அரசின் பல திட்டங்களுக்கு எதிராக தன் கையை உயர்த்தியிருக்கிறது திமுக. இந்நிலையில் அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்தால் எதிர் கட்சிகள் அன்று போலவே கறுப்பு பலூன் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.