![](admin/uploads/.5d7d1f3f2f1660.38607466.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் துலே பகுதியில் அமைந்த ரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்தனர் என கூறப்படுகிறது.
வெடிவிபத்தில் தொழிற்சாலையை சுற்றிலும் கரும் புகையாக காணப்படுகிறது. தீயை அணைக்க சுற்று வட்டாரத்தில் இருந்து தீயணைக்கும் படைகள் விரைந்து சென்றுள்ளன. இந்த வெடிவிபத்தில் 13 பேர் வரை பலியாகி உள்ளனர். 58 பேர் காயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்த போலீசார், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்