Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரவுடிகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் தொடரும் பட்டா கத்திகள்...

ஆகஸ்டு 31, 2019 01:02

சென்னை: சென்னை அருகே கல்லூரி வளாகத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா கத்தியால் கேக் வெட்டி நண்பர்கள் முன்னிலையில் ரவுடி ஆட்டம் பாட்டமாக கொண்டாடியுள்ளனர். கல்லூரி வளாகத்தில் ஆயுதத்துடன் வலம் வந்தது ரவுடி தமிழ்வாணன் மீது வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில் சில ஆண்டுகளாக ரவுடிகள் பயங்கர ஆயுதங்களை கொண்டு பிறந்த நாள் கொண்டாடுவதும், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிடும் செயல்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி ஜீசஸ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் சென்னையில் ரவுடி வினோத் தனது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதே போல் நேற்று கோவையில் ரவுடிகள் சிலர் கத்தி மற்றும் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படங்களில் இருக்கும் 6 பேரும் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்