Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி: பாராளுமன்றத்தில் கத்தியுடன் நுழைந்த நபர் கைது

செப்டம்பர் 02, 2019 06:26

புதுடெல்லி: பாராளுமன்ற வளாகத்தில் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கையில் கத்தி வைத்திருந்தார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

பாராளுமன்ற வளாகத்தில் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்த நபரை பாராளுமன்ற காவல் நிலைய வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்