Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

செப்டம்பர் 04, 2019 11:02

சென்னை:  தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து,யர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அவர் தாக்கல்  செய்துள்ள மனுவில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் முழுமையான விவரங்கள் இல்லை என்றும், முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி, இந்திய தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

தலைப்புச்செய்திகள்