![](admin/uploads/.5c946dcd7d0ee5.48610642.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அவுரங்காபாத்: உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா பகுதியில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு ரூ.8,000 கோடி மதிப்பீட்டிலான இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா 1.5.2016 அன்று நடைபெற்றது.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, 8 கோடி ஏழைகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட கேஸ் இணைப்புகளின் எண்ணிக்கை 8 கோடியை தொட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி எட்டு கோடியாவது கேஸ் இணைப்பை பயனாளிக்கு வழங்கினார். இதில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்றார்.