![](admin/uploads/.5c8f7504c5e3e1.81383957.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
லக்னோ: ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த கல்யாண் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அவர் இன்று தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலுக்கு வந்துள்ளார்.
அவருக்கு புதிய உறுப்பினர் அட்டையை மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தியோ சிங் வழங்கி, கட்சிக்கு வரவேற்றார்.
கட்சி அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிவ பிரசாத் சுக்லா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர் சிங் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கல்யாண் சிங் போன்ற மூத்த தலைவர்கள் கட்சிக்கு மீண்டும் வருவதன்மூலம், கட்சியின் அடித்தளம் மேலும் வலுவடையும் என மாநில தலைவர் குறிப்பிட்டார்.