Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நளினிக்கு பரோலை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

செப்டம்பர் 12, 2019 07:10

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி (வயது 52), தன் மகளின் திருமணத்திற்காக ஒரு மாத கால பரோலில் வந்தார். கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி பரோலில் வந்த அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்கா ராமன் ஆகியோர் கொண்ட அமர்வில் நளினியின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், நளினிக்கு பரோல் காலத்தை நீட்டிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

இலங்கையில் இருக்கும் தனது மாமியார் வருவதற்கு தாமதம் ஆவதால், தனது பரோல் காலத்தை நீட்டிக்கும்படி நளினி கூறியதை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்