Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வர அச்சம்

செப்டம்பர் 15, 2019 09:57

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கம் பகுதில் உள்ள 44 பஞ்சாயத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் நகர பொதுமக்கள் தினந்தோறும் 500க்கும்  மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்திற்கு வருகிறார்கள். 

அதாவது தங்களுடைய புதிய ஆதார் அட்டை பெறுவதற்கு, ஆதார் அட்டை பெயர் சேர்த்தல், பெயர் சேர்த்தல், புதுப்பித்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுதல் மற்றும் பட்டா மாறுதல் இப்படி பல்வேறு தேவைக்காக வந்து செல்கிறார்கள்.

இந்த வட்டாட்சியர் அலுவலகத்தை தினந்தோறும் காலை நேரங்களில் சுத்தம் செய்ய வேண்டியது பேரூராட்சி நிர்வாகம்தான். ஆனால் பேரூராட்சியின் அலட்சியத்தால், சுத்தம் செய்யப் படாததால் தேங்கியிருக்கும் குப்பைக் கழிவுகளால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.

மேலும் இரவு நேரங்களில் மது அருந்துவோர்கள் பல சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்