Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்ட விரோதமாக பேனர் வைக்கமாட்டோம்: உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்

செப்டம்பர் 16, 2019 06:11

சென்னை: சென்னையில் சுபஸ்ரீ (23 வயது), என்ற இளம்பெண் கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது.

அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இதன்பின்னர் திமுகவின் நிகழ்ச்சிகளுக்காக எவ்வித பேனர்களும், கட் அவுட்களும் தொண்டர்கள் வைக்கக் கூடாது எனவும், மீறி வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இன்று திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சட்ட விரோதமாக ஒருபோதும் பேனர்கள் வைக்கமாட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்