![](admin/uploads/.63a1ad14173ba4.80754441.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நபர் அருகே உள்ள கர்வாரா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த கொலை நடந்துள்ளது. போலீசார் கூறியதன்படி, பங்கஜ் என்பவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றிவரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை பின் தொடர்ந்து தொல்லை செய்துள்ளார்.
பெண் தனது வீட்டில் பங்கஜ் பற்றி கூற, சனிக்கிழமை மாலை பெண்ணின் தந்தை மற்றும் மகன் இணைந்து அவரை கொலை செய்துள்ளனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது.