![](admin/uploads/.5e9472fab76d08.01358712.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு கடந்த ஜூன் 24-ந்தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், காஷ்யப், ராஜ்பார், திவார், பிந்த், கும்ஹார் உள்ளிட்ட 17 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் தலித் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர்களும், கமிஷனர்களும் இந்த சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கு தலித் சமுதாயத்தினருக்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை மனதில் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சமூக ஆர்வலர் கோரக் பிரசாத் என்பவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதிர் அகர்வால், ராஜீவ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த உத்தரவுக்கு தடை விதித்தது. தலித் பட்டியலை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எந்த அரசுக்கும் இந்த அதிகாரம் இல்லை என்றும் கோர்ட்டு தெரிவித்தது.
ஏற்கனவே 2005-ம் ஆண்டு முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அரசும் 11 சமுதாயத்தினரை தலித் பட்டியலில் சேர்த்தது. கோர்ட்டு இதற்கு தடை விதித்ததும் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. பின்னர் மாயாவதி தலைமையில் அமைந்த பகுஜன் சமாஜ் கட்சி அரசு இந்த அறிவிக்கையை ரத்துசெய்தது. அகிலேஷ் தலைமையிலான அரசு மீண்டும் அதனை இணைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.