![](admin/uploads/.61288c024bb106.72368738.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாட்னா : பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பள்ளிக்கூட கட்டடம் ஒன்று அடித்துச் செல்லப்படும் காட்சி வைரலாக பரவி உள்ளது.
வடமாநிலங்களில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. பீகாரிலும் கனமழையின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. பீகாரின் கத்திஹார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு பரபரபரப்பு நிலவியது.
இச்சம்பவத்தின்போது மாணவர்கள் யாரும் பள்ளியில் இல்லை. பள்ளியின் நிலை கண்டு மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அங்கு உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.