![](admin/uploads/.5cc29a5c5b4b55.64100563.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமேஷ்வரன், இவரும் காந்திநகரைச் சேர்ந்த சூர்யா என்பவரும் பனகமுட்லு பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று சோமேஷ்வரன், சூர்யா இருவரும் கல்லூரி நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தபால்மேடு பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சென்ற அரசுப்பேருந்து, இருசக்கரவாகனம் மீது நேருக்குநேராக மோதியது. இதில் மாணவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.