Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மூத்த நீதிபதிகள் ஆய்வு

செப்டம்பர் 17, 2019 12:33

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மூத்த நீதிபதிகள் ஆய்வு செய்துள்ளனர்.

வரும் 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தின் உள்ளே தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுகளை நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் ஒன்று உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தது. இந்த மிரட்டல் கடிதம் குறித்து சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மிரட்டல் கடிதம் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கபட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மூத்த நீதிபதிகள் வீனித் கோத்தாரி, மணிக்குமார், சசிதரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிலாக பாதுகாப்பு படை கமாண்டர் ஸ்ரீராம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மிரட்டல் கடிதம் குறித்தும், உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்யபட்டுள்ள பாதுகாப்பு ஏற்படுகள் குறித்தும், பாதுகாப்பு சோதனைகள் குறித்தும் ஆய்வு செய்யபட்டதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்