Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவிகளிடம் பாலியல் தொல்லை: நாமக்கல் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

செப்டம்பர் 17, 2019 12:45

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் சத்துணவு மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த நான்கு வருடங்களாக பள்ளி ஆசிரியராக புதன்சந்தையை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றிவருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சத்துணவு அமைப்பாளராக இருக்கும் ஜெயந்திக்கும் தகாதஉறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளிவளாகத்திலே ஆசிரியர் சரவணனும் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியும் பள்ளி கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதியில் மீண்டும் பள்ளியின் ஆசிரியர் சரவணனும் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியும் பள்ளி வளாகத்திலே தகாத உறவில் ஈடுபடமுயன்றதாக தெரிகிறது. இதனையறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியில் இருந்த ஆசிரியர் சரவணன் வகுப்பறைக்குச் சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

சம்பவம் குறித்து பள்ளிக்கு வந்த கல்வி அதிகாரிகள் மற்றும் புதுச்சத்திரம் காவல்துறையினர் பள்ளி ஆசிரியர் சரவணனை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் காரணமாகவும் ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊர் மக்கள் 10பேர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்