Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ தம்பதிகளுக்கு திருநீறு பூச வைத்த சம்பவத்தால் பரபரப்பு

செப்டம்பர் 17, 2019 12:54

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கிளன்ராக் பகுதியை சேர்ந்த ஜான் - ஜெனிபர் தம்பதியர், பாம்பேகேஸ் பகுதியில் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன், வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர், தம்பதியரை மிரட்டியதுடன் நெற்றியில் திருநீறு பூச வற்புறுத்தினர். 

அச்சம் அடைந்த தம்பதியர் திருநீறு பூசிக்கொண்ட நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜான் தம்பதியர் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தலைப்புச்செய்திகள்