Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு மேலும் நீதிமன்ற காவல் நீடிப்பு

செப்டம்பர் 19, 2019 10:22

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
 
சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த மாதம் 20-ந் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மறுநாள் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பப்பட்டார். சி.பி.ஐ. காவலுக்கு மீண்டும், மீண்டும் 4 முறை அனுப்பப்பட்ட ப.சிதம்பரத்தை கடந்த 5-ந் தேதி முதல் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைந்து இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 3-ம் தேதி வரை சிறை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரத்திற்கு உடல்நலக் குறைவு காரணமாக நீதிமன்றக் காவல் நீட்டித்ததற்கு அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு  தெரிவித்தார்.  

தலைப்புச்செய்திகள்