Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூலவர் சிலையை திருடிச் சென்றாரா? நித்யானந்தா மீது பரபரப்பு புகார்

செப்டம்பர் 20, 2019 02:29

சேலம்: சாமியார் நித்யானந்தா மூலவர் சிலையை திருடிச் சென்றுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

நித்யானந்தாவின் சமீபத்திய பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் கேலியாக பரப்பப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், அவர் மீது சிலைக்கடத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பாலவாடியில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலயத்திற்கு சொந்தமான மூலவர் லிங்கத்தை நித்யானந்தா திருடிச் சென்றதாகவும் அதனை மீட்டுத்தரும்படி பாலவாடியைச் சேர்ந்த வேலுசாமி, சக்திவேல் ஆகியோர் புகார் செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்