Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் 2ஆவது கல்வி தொலைக்காட்சி தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மதுரை,தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 70 லட்சம் மாணவர்களின் கல்வியை செழுமைப்படுத்துவதற்கே அங்கீகார ஆணை வழங்கப்படுவதாகவும் தனியார் பள்ளிகளிடம் தாங்கள் போட்டியோ, பொறாமையோ காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் திறனை உயர்த்தவே 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படவுள்ளது என தெரிவித்தார்.