Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் மொழியில் எழுதுவதற்கே தடுமாறிய சூர்யா ரசிகர்கள்

செப்டம்பர் 23, 2019 05:10

புவனகிரி: நடிகர் சூர்யாவின் ரசிகர்கள், தமிழ் மொழியில் எழுதுவதற்கே தடுமாறிய சம்பவம் ஒன்று, புவனகிரியில் அரங்கேறியுள்ளது. 

சூர்யா நடிப்பில் உருவான 'காப்பான்' திரைப்படம், அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரியில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இளைஞர்கள் சிலர் பேண்டு வாத்தியம் முழங்க, ஊர்வலமாக சென்றுள்ளனர். 

விசாரணையில் அவர்கள் சூர்யாவின் ரசிகர்கள் என்பது தெரியவந்துள்ளது. முன்அனுமதி பெறாமல் ஊர்வலம் சென்றதால், அவர்களை எச்சரித்த காவல் ஆய்வாளர் அம்பேத்கர், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். அவர்கள் தந்த கடிதத்தை படித்த காவல் ஆய்வாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

கல்லூரி படிப்பதாக கூறிய மாணவர்கள், ஆய்வாளர் என்பதற்கு ஆவ்யாளர் என்றும், ஆய்வாலர் என்றும், பல்வேறு தவறுகளுடன் எழுதியுள்ளனர். இதுதொடர்பாக  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள, காவல் ஆய்வாளர் அம்பேத்கர், இப்படியே நிலைமை போனால், "தமிழை யார் காப்பான்" என பதிவிட்டுள்ளார். 

தலைப்புச்செய்திகள்