Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்கள் தாக்கி ஆட்டோ ஓட்டுனர் மரணம்

செப்டம்பர் 25, 2019 06:41

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் நேற்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். செங்கல்பட்டு அனுமந்தபொத்தேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டனரான திலீப்குமார் என்பவர் பள்ளி அருகே தனது ஆட்டோவை ஓட்டிச் சென்ற போது மாணவர்கள் வந்த வாகனம் மோதியுள்ளது.

இதுதொடர்பாக திலீப்குமாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. அப்போது திலீப்குமாரை மூன்று பள்ளி மாணவர்களும் சரமாரியாக தாக்கியபின், மாணவன் ஒருவன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தப்பியோட மற்ற இருவரும் தங்களது வாகனத்தில் தப்பியோடி விட்டனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த திலீப்குமார் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக திலீப்குமாரின் மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் 3 மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்