Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த மாணவி கைது

செப்டம்பர் 25, 2019 06:48

உத்தரபிரதேசம்: பாஜக மூத்த தலைவர் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியை, மிரட்டி பணம்பறிக்கும் நோக்கில் பாலியல் புகார் கூறியதாக போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தா உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு ஆசிரமங்களையும், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இடந்நிலையில் அவருக்கு சொந்தமான சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர், சின்மயானந்தா தன்னை பலவந்தப்படுத்தி மிரட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் சின்மயானந்தா கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டாலும் 2 நாட்கள் மட்டுமே சிறையிலிருந்த அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்படாமல், மிரட்டி பாலியல் உறவு கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகார் அளித்த மாணவி மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் பாலியல் புகார் கூறியதாக, புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தாம் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கக் கோரி ஷாஜகான்பூர் நீதிமன்றத்தில் மாணவி மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்த நிலையில், விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த மாணவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகவும் மாணவியை அனுமதிக்காத காவல்துறையினர், செய்தியாளர்கள் வந்த பின்னர் மாணவியை நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்