Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

செப்டம்பர் 27, 2019 02:39

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு, கடந்த 11-ம் தேதியில் இருந்து விசாரணையில் இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் தினமும் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை  நீதிபதி சுரேஷ் குமார் ஒத்திவைத்தார்.

தலைப்புச்செய்திகள்