Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஆறு பேர் கைது

செப்டம்பர் 27, 2019 03:11

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர். மல்லிக்குந்தம் - கூணான்டியூர் சாலையில் மேச்சேரி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது வெடிக்கானூரைச் சேர்ந்த ஐயன்துரை என்பவர், அனுமதியின்றி ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், துப்பாக்கி தயாரித்த கீரைக்கானூர் பகுதியைச் சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய சுத்தி உளி, பித்தளை தகடுகள், பேரல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

காசி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேச்சேரி வெள்ளக்கரடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, வெடிக்காரனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், வெங்கட் மற்றும் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் ஆகியோரை கைது செய்த போலீஸார், நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். 
இதனைத் தொடர்ந்து ஆறு பேரும், மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தலைப்புச்செய்திகள்