![](admin/uploads/.60d2bd3507f1e4.85290607.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஜம்மு: காஷ்மீரில் உள்ள ஜம்முவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங்.
இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜஸ்வந்த் சிங், அங்குள்ள ரெயில்வே தலைமை அலுவலக கட்டிடத்தில் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
விசாரணையில் ஜஸ்வந்த் சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.