![](admin/uploads/.5ce3939fa95be9.49901990.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவையில் தனியார் பாரில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்தவர் ஜான்சன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் கடந்த வெள்ளிக் கிழமை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள ஜே.கே ஹோட்டல் எனும் தனியார் பாரில் மது அருந்தி உள்ளார்.
அப்போது பார் ஊழியர்கள் பணம் கேட்டதால், மது போதையில் இருந்த ஜான்சன் பணம் தரமுடியாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அதேபோல் பாரில் குடித்துக் கொண்டிருந்த மற்றவர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த சாய்பாபா காலனி போலீஸார் விசாரணை நடத்தியதில், ஜான்சனிடம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பொது இடத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் ஜான்சனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.