![](admin/uploads/.5f2113a15d0a71.57208193.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தபால் ஓட்டுகளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக.,வின் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை விட திமுக வேட்பாளர் அப்பாவு, வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த வெற்றியை எதிர்த்து, அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதில், வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்றும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் எனவும் அந்த வழக்கில் கூறப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், அக்., 4ம் தேதி, 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும் எனவும் தபால் வாக்குகளை மட்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.