Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டதற்கு எதிராக அதிமுக எம்எல்ஏ தரப்பில் மனு

அக்டோபர் 02, 2019 06:52

சென்னை: ராதாபுரம் தொகுதியில் பதிவான 203 தபால் வாக்குகளை மறுபடியும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இன்பதுரை தாக்கல் செய்துள்ள அவசர மனுவில், தடை கேட்டு உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதால், மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவை நிறுத்தி வைக்க கோரியுள்ளார். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதில் சிரமம் இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டுமென கோரிக்கை விடுத்தார். 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அப்பாவு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டதுடன், இதுதொடர்பாக நாளை விரிவாக விசாரணை நடத்துவதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார். 

தலைப்புச்செய்திகள்