![](admin/uploads/.5eca1bccf144b8.18459730.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அமராவதி: உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்குள்ள துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவியது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி புனித நீராட பிரதமர் மோடி சென்றார். அங்கு பணிபுரிந்த துப்புரவு தொழிலாளிகளின் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.
தனக்கு வணக்கம் கூறுபவர்களுக்கு கூட திரும்ப மரியாதை செய்யாத மோடி, தனது குருவான அத்வானியையும் அவமரியாதை செய்தார். மத்தியில் ஆட்சியில் இருந்தும் அனைத்து துறைகளிலும் தோல்வியைக் கண்டுள்ளார். அமலாக்கத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என அனைத்தையும் தவறான வழியில் பயன்படுத்தினார். விவசாயிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியை தவிர, நாட்டில் அனைவரும் மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர் என அவர் கூறினார்.