![](admin/uploads/.5e9840f0a0cf92.45543512.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஈரோடு: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் சர்வதேச அளவிலான தரவுப் போட்டியில் ஈரோடு மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாசா மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியல் மையம் இணைந்து வானியல் புகைப்படங்களுக்கான தரவு சவால்கள் என்ற போட்டியை ஆன்லைனில் நடத்தின. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் போட்டிக்கான சிறப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்ட வழிமுறையை பின்பற்றி புகைப்படங்களை உருவாக்கி சமர்ப்பித்தனர். இதில் உலக அளவில் சிறந்த புகைப்படங்களை உருவாக்கிய 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவன் நிகிலேஷ்குமாரும் மாணவி தன்மதியும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் உருவாக்கிய வானியல் ஆய்வு சார்ந்த புகைப்படங்கள் மாணவர்களின் பெயருடன் நாசா இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மாணவர்களுக்கு நாசா சான்றிதழ் வழங்க உள்ளது