![](admin/uploads/.6295a8fdc6fd95.27601187.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: எல்லையில் பணியாற்றும் நமது பாதுகாப்புபடை வீரர்கள் எதிரி நாட்டு ராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலால் வீரமரணம் அடைகின்றனர். இதனை தவிர்ப்பதற்கு மேக் இந்தியா திட்டத்தின்படி எல்லை பாதுகாப்புபடை வீரர்களுக்கு பிரத்யோகமாக ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 138 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது குண்டு துளைக்காத பிரத்யோக ஜாக்கெட்டுகளை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பத்திரியைாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், நமது ஜவான்களின் உயிரிழப்பை தடுக்க தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மிகவும் கடின எஃகுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. எத்தகைய வலிமையான தோட்டாக்களையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.